உருண்டை குழம்பு

உருண்டை குழம்பு
தேவையானவை :
கடலைப்பருப்பு - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
இஞ்சி - ஒரு துண்டு
மிளகு, சோம்பு, சீரகம்- சிறிதளவு கசகசா - சிறிதளவு
தேங்காய் துருவல் - கால் கப்
தக்காளி, பெரிய வெங்காயம் - 3 (நறுக்கவும்)
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
கடுகு, உளுத்தம்பருப்பு - சிறிதளவு சாம்பார் வெங்காயம் - நான்கு கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
கடலைப் பருப்பு மற்றும் துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பருப்பு வகைகளை லேசாக அரைத்து சிறிதளவு வெங்காயத்தை சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளி கசகசா மீதமிருக்கும் வெங்காயம் சோம்பு மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, சாம்பார் வெங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் கலந்து வதக்கி பச்சை வாசனை நீங்கியதும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
அதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். கொதித்து வந்ததும் வேக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறலாம்.

Comments