Small story tamil || ஒரு குட்டி கதை || stories tamil || inspiration story in tamil || short story in tamil

ஒரு குட்டி கதை:
கடவுள்:  கழுதையைப் படைத்து அதனிடம் சொன்னார்.  " நீ
           கழுதையாக பிறந்து நாள்  முழுவதும் பொதி சுமப்பாய் உனக்கு சிந்திக்கும் திறனே கிடையாது. புல்லைத் தின்று 50ஆண்டுகள்
               வாழ்வாய்."
கழுதை:  கழுதையாகப் பிறந்து
50ஆண்டுகள் வாழ விருப்பமில்லை.
20ஆண்டுகளே போதும்.
கடவுள்: அப்படியே
ஆகட்டும்.
கடவுள்:  நாயைப்
படைத்து அதனிடம்
சொன்னார்."நீ மனிதனின் வீட்டை பாதுகாத்து அவனுக்கு நல்ல.
நண்பனாய் இருப்பாய். மனிதன் தரும்
மிச்ச மீதிகளை உண்டு
30 ஆண்டுகள் வாழ்வாய்."
நாய்:  30ஆண்டுகள்
எனக்கு அதிகம்.15
ஆண்டுகளே போதும்.
கடவுள்:அப்படியே ஆகட்டும் .
கடவுள்:  குரங்கைப் படைத்து அதனிடம்
சொன்னார்."நீ மரங்களில்
கிளைக்கு கிளைதாவி குழந்தைகளை
மகிழ்விப்பாய். 20 ஆண்டுகள் உயிர்
வாழ்வாய்."
குரங்கு:  எனக்கு10 வருடங்களே போதும் சாமி.
கடவுள்:  அப்படியே ஆகட்டும்.
கடவுள்:  மனிதனைப் படைத்தார்."நீ சிந்திக்கும் ஆற்றலுடன் பிறப்பாய். உன்
அறிவைப் பயன்படுத்தி எல்ல
உயிர்களையும்  உன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவருவாய். 20ஆண்டுகள் உயிர்
 வாழ்வாய்."
மனிதன்:  "சாமி, 20வருடம் எனக்கு
ரொம்ப குறைவு. கழுதை வேண்டாமென்று சொன்ன 30
வருடங்களையும்,நாயின்
15வருடங்களையும்,குரங்கின்10
வருடங்களையும் எனக்கு தாருங்கள்."
கடவுள்: அப்படியே
ஆகட்டும். அன்றிலிருந்துமனிதன்20வருடங்கள்
மனிதனாகவும், பின் திருமணம்
செய்து30 ஆண்டுகள் கழுதையைப்
போல குடும்பப் பாரம் சுமந்தும், குழந்தைகள்வளர்ந்த பின்15
ஆண்டுகள். நாயைப் போல
வீட்டைப் பாதுகாத்து, கடைசி10 வருடங்கள் குரங்கைப் போல
தான். ஒவ்வொரு மகன் அல்லது மகள் வீடு சென்று பேரக்குழந்தைகளை
மகிழ்விக்கிறான்.....!!!!!

Comments